விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சிற்பி அம்பேத்கரை இழிவு படுத்தும் விதமாக பேசிய மத்திய உள்துறை மந்திர அமித்ஷா வை பதவி விலக வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோவில்பட்டியில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் மாடசாமி தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பா.பிரபாவளவன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் சு.ஸ்ரீதர் என்ற கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின், மாநில துணை செயலாளர் வணிகர் அணி கீழ ஈரால் ஜெகசாமி ,விசிக நகர செயலாளர் இரா.கருப்பசாமி பாண்டியன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் விஜயா அந்தோணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜா.மனுவேல், வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் வின்சென்ட் ராஜ்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
,
,
