• June 8, 2025

Month: December 2024

சினிமா

‘என் கணவர் எப்படி இருக்க வேண்டும்’ – ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அனிமல் மற்றும் புஷ்பா 2 படத்தின் வெற்றி அவரது புகழை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அது அவரை இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளது. இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வரும் நிலையில் தனக்கு கணவராக வருபவரின் தகுதிகளை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:- ‘ஒரு உறவில் அன்பு, அக்கறை, நல்ல […]

செய்திகள்

விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்-அமைச்சர் உத்தரவு

2024-25ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமைப்படுத்தி, 18 மாவட்டங்களில் 1977.20 மீட்டர்  நீளமுள்ள 34 உயர்மட்ட பாலங்கள் ரூ 177 கோடியே 84 லட்சத்து 60 ரூபாய் செலவில் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் […]

பொது தகவல்கள்

பாத வெடிப்பை சரிசெய்வது எப்படி?

கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்வது எப்படி என்பது பற்றி இங்கு பார்க்கலாம் … தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், உங்களின் பாதங்களில் உள்ள வெடிப்பு நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும். வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பாத பிரச்சனைகள் விரைவில் குணமாகும். இரவில் […]

பொது தகவல்கள்

டிசம்பர் 21 சர்வதேச தியான தினம்

இந்தியா உலகிற்கு வழங்கிய கொடைகளுள் முக்கியமானவை யோகாவும், தியானமும் என்றால் மிகையல்ல. ஐ.நா. சபை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் யோகாவை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதைப் போல் 2024 டிசம்பர் 21 முதல் சர்வதேச தியான நாளாக ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டுள்ளது. உலக அரங்கிற்கு யோகாவையும் தியானத்தையும் கொண்டு சென்ற பெருமை நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சேரும் என்பதில் ஐயமில்லை. *தியானம் என்பது உடலையும் மனதையும் அசைவற்று வெறுமனே வைத்திருப்பதாகும். பத்மாசனம் அல்லது […]

கோவில்பட்டி

`எங்கள் மகன் சாவில் நீதி வாங்கி கொடுங்கள்’:அமைச்சர் கீதாஜீவனிடம், கொலை செய்யப்பட்ட கோவில்பட்டி

கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்த கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின்  இளைய மகன் கருப்பசாமி (வயது 10), 5-ம் வகுப்பு படித்து வந்தான். உடல்நல பாதிப்பால் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறையில் வீட்டில் இருந்த கருப்பசாமி கடந்த 9-ம் தேதி காலை சுமார் 10 மணிக்கு மாயமானான். இதுகுறித்து பாலசுந்தரி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து  சிறுவனை தேடினர். மறுநாள் அதிகாலை சிறுவன் கருப்பசாமி அருகே உள்ள மாடியில் இறந்து கிடந்தான். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மாவட்டம் உருவாக்கக்கோரி தேசிய விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி நகரம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது, ஒன்றுப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் துணை மாவட்ட தலைநகரம் ஆக இருந்த கோவில்பட்டி பகுதியில் பல்வேறு தேச தலைவர்கள் உருவாகி விடுதலை போரில் மிகப் பெரிய பங்களிப்பு செய்து உள்ளனர். மாவட்டத்துக்கு முழு தகுதி பெற்ற ஊராக கோவில்பட்டி விளங்கி வருவதால் கோவில்பட்டி,கயத்தாறு, எட்டயபுரம்,ஓட்டப்பிடாரத்தின் வடக்கு பகுதி,விளாத்திகுளம்,சாத்தூர்,வெம்பகோட்டை,திருவேங்கடம் ஆகிய பகுதிகளை இணைத்து கோவில்பட்டி மாவட்டம் உருவாக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு […]

தூத்துக்குடி

பள்ளி மாணவர்களுடன் காலை உணவு அருந்திய ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் இளம்பகவத் நேற்று ஆய்வு மேற்கொண்டார். குளத்தூர் ஊராட்சி, இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர்  மாணவர்களுடன் அமர்ந்து ஆட்சியர் இளம்பகவத் காலை உணவு அருந்தினார்.. அங்கு மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். […]

செய்திகள்

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்ராக்ட் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. ரோட்டரி சங்கத்தின் மூலம் கல்லூரி மாணவர்களிடையே தலைமைபண்பு,சேவை மனப்பான்மையை வளர்த்திட கல்லூரிகள் தோறும் ரோட்ராக்ட் சங்கங்களை உருவாக்கி வருகிறது.அந்த வகையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் தொடங்கப்பட்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இந்த விழாவுக்கு கோவில்பட்டி ரோட்டரி […]

கோவில்பட்டி

அமித்ஷாவை கண்டித்து கோவில்பட்டியில் திமுக ஆர்ப்பாட்டம்

அரசியல் சாசனம் மீது மாநிலங்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று  திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக நகரச்செயலாளர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். திமுக நகர அவைத் தலைவர் முனியசாமி,நகரத் துணைச் செயலாளர் அன்பழகன்,ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு […]