அமித்ஷாவை கண்டித்து கோவில்பட்டியில் திமுக ஆர்ப்பாட்டம்

அரசியல் சாசனம் மீது மாநிலங்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டியில் அம்பேத்கர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக நகரச்செயலாளர்,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
திமுக நகர அவைத் தலைவர் முனியசாமி,நகரத் துணைச் செயலாளர் அன்பழகன்,ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்,பீட்டர்,மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா,யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ்,மாவட்ட பிரதிநிதி மாரிச்சாமி, ரவீந்திரன்,ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டுமேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் மாதேஸ்வரன், லவராஜா(கவுன்சிலர்), நகர, ஒன்றிய,மகளிரணி நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டு மத்திய மந்திரி அமித்ஷா வை கண்டித்து கோஷமிட்டனர். முன்னதாக அம்பேத்கர் திருவுருவ சிலையை சுத்தம் செய்தனர்.
