• June 6, 2025

Month: November 2024

தூத்துக்குடி

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன்  தொடக்கம்

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் கந்தசஷ்டித் திருவிழா முக்கியமானது. அதன்படி, கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் யாக சாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெபெறுகிறது. மாலை 3:30 […]

செய்திகள்

டிஜிட்டல் கைது: நடப்பாண்டில் 10 மாதங்களில் ரூ.2,140 கோடி மோசடி

கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ.2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறையின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது. சில மோசடி கும்பல்கள், பொதுமக்களிடம் டிஜிட்டல் கைது என்று கூறி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 92,334-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்துள்ளன. அப்பாவி பொதுமக்களின் மீது பொய் புகார்களை கூறி, டிஜிட்டல் கைது செய்வதாகவும், பணம் […]

செய்திகள்

சென்னைக்கு திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பாக கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். சென்னையில் இருந்து பேருந்து, ரயில்கள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர் சென்றனர். சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள […]

சினிமா

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும்  ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.  இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் […]

சினிமா

அமரன் படத்தின் வசூல்: படகுழு அதிகாரபூர்வ அறிவிப்பு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நேற்று திரையரங்கில் வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று வெளியானது. தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் […]

செய்திகள்

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடி: மத்திய நிதி அமைச்சகம்

நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. 8-வது முறையாக மாதந்திர ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.70 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.1% […]

செய்திகள்

கிழக்கு லடாக் எல்லையில் தொடங்கியது இந்திய-சீன ராணுவ ரோந்து பணி

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பேட்ரோல் பாய்ண்ட் 14-ல் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்தனர். சீன தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். எனினும், அது குறித்த தகவலை அந்த நாடு மறைத்துவிட்டது. இந்த மோதலை அடுத்து போருக்கு தயாராகும் நோக்கில் இந்தியா தனது ராணுவத்தை அங்கே குவித்தது. பதிலுக்கு சீனாவும் […]

செய்திகள்

வைகையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட் கிளை

வைகை ஆற்றில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சிவகங்கையை சேர்ந்த சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகை ஆறு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை செழிக்க வைக்கிறது. சிவகங்கை ஆதனூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்றன. ஆதனூர் கண்மாயின் கொள்ளளவு 22.87 மில்லியன் கன […]

செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கான்வே 4 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களிலும், கேப்ட்ன் டாம் லாதம் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நெருக்கடியான சூழலில் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் யங் மற்றும் டேரில் மிச்செல் ஜோடி […]