சென்னைக்கு திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பாக கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். சென்னையில் இருந்து பேருந்து, ரயில்கள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர் சென்றனர். சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 2-ம் தேதி இன்று முதல் 4-ம் தேதி வரையில் தினமும் இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன், 3165 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 3405 பேருந்துகள் என மொத்தம் 12846 பேருந்துகள் இயக்கப்படும். எனவே பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
