• June 8, 2025

Month: November 2024

சினிமா

சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தின் ரிலீஸ் தேதி: படகுழு அறிவிப்பு

நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாராகும் ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ் ராவணனாக வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அனுமானாக சன்னி தியோல், கும்பகர்ணனாக பாபிதியோல் ஆகியோர் நடிக்கின்றனர். ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை உருவாக்குகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும்நிலையில், அதிலிருந்து சில புகைப்படங்கள் ஏற்கனவே வலைதளத்தில் கசிந்து […]

செய்திகள்

ஐபிஎல் மெகா ஏலம்-நடைபெறும் இடம், தேதியை அறிவித்த பிசிசிஐ

ஐபிஎல் 18-வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25-ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கு பெற […]

ஆன்மிகம்

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம்

கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான். அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது.நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையாகிறது. இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் […]

ஆன்மிகம்

சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்…?

காசியப்ப முனிவர், மாயா என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் என்னும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான். இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். இதை தடுக்க சிவபெருமானால் அவதரித்தவர் தான் முருகப்பெருமான். முருகப்பெருமான் பார்வதிதேவியிடம் வேலை பெற்று, சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களை காத்தது ஐப்பசி சஷ்டி திதியில் தான். அதனால்தான் முருகப்பெருமானுடைய கோயில்களில், […]

செய்திகள்

ரோகித், விராட் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள்: மைக்கில் வாஹன் கருத்து

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர். 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் கூறியதாவது:- ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி […]

செய்திகள்

கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்படும்.: மு.க.ஸ்டாலின்

கோவையில் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கோவை அனுப்பர் பாளையத்தில்., பள்ளி கல்வி துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் […]

செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பூமியலிருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 விண்வெளி வீரர்கள் வாக்களித்துள்ளனர். அமேரிக்கா அதிபர் தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை தேர்தல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக எலக்ட்ரால் வாக்குகளை பெற்று குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்று […]

செய்திகள்

திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்கள்; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.,ஜெயக்குமார் தனது எக்ஸ்  தள பக்கத்தில் திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தொடரும் தாக்குதல்கள்! என்ற தலைப்பில் கூறி இருப்பதாவது:- சிறிய வயதுள்ள ஒரு சிறுவனை சாதியை வைத்து தாக்கும் அவலத்தை ஆட்சியாளர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர்? வேங்கைவயல் நாற்றம் இன்னும் வீசி கொண்டிருக்க,நெல்லையில் சிறுவன் மீது சாதிய வன்கொடுமை தாக்குதல் என இன்னும் எத்தனை அவலங்கள் காத்திருக்கிறது? கூட்டணி கட்சியினரை கட்டுபடுத்தியும்,குரலெழுப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்தும் முழு கட்டப்பஞ்சாயத்துக்காரராக மாறியுள்ள மக்கள் […]

செய்திகள்

தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன்: நடிகை கஸ்தூரி

அனைவரின் நலன் கருதி நவம்பர் 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன். என்று நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது:- கடந்த 2 நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. இருப்பினும் எனது மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதை கடந்து வாழும் தெலுங்கு மக்களுக்கு நான் பேசிய […]