ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி ஆக்கி கழகத்தின் தலைவர் டி.மோகன் அருமைநாயகம், செயலாளர் முனைவர் சி.குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி சங்கத்திடம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்படும் போட்டியில் நமது மாவட்ட ஆக்கி கிளப் வீரர்கள் விளையாட வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம் மாவட்ட ஆக்கி சங்கத்திடம் அனுமதி பெற்று நடத்தப்படும் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என தூத்துக்குடி […]
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் இயக்குவதற்காக 25 இருசக்கர அவசரகால மருத்துவ வாகனங்கள் (Bike Ambulance) வாங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடியில் வாங்குவதற்கு அனுமதி […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசகூடாது என்று தடை விதித்துள்ள சென்னை ஐகோர்ட், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்க தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல் அமைச்சரும் , அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசியிருந்தார். விபத்தில் இறந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் […]
நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீது கனரா வங்கி புகார் அளித்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தை மீட்டெடுக்க […]
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நவம்பர் 6 நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணிஅசத்தியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 9-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் […]
கோவில்பட்டி அருகே வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடிமர கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது
கோவில்பட்டி அருகே திருவேங்கடத்தில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் வழியில் துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன் முருகன் மீது அன்பும், ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற அடியவருக்கு காட்சி கொடுத்து நான் வாழைமரத்தில் குடி இருப்பதாக கூறி காட்சி கொடுத்தார். இதை தொடர்ந்து வாழைமர பாலசுப்ரமணியர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்து வருகிறார். வேலாயுதம் உருவாகிய கோவிலை அவரது வாரிசுதார்கள் தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். அத்துடன் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்வி கொள்கை 2020-ன் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இது அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வகை செய்யும் திட்டமாகும். இதன் கீழ், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனத்தில் (QHEIs) சேர்க்கை பெறும் […]
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தும், திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். அதனை தொடர்ந்து திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய உதயநிதி திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் துண்டு போட்டு காத்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இது […]
தூத்துக்குடி மாவட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மீனவர்களின் வாரிசுகள் வாழ்வு மேம்பட இந்திய கப்பல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையில் (நவிக்) சேர்வதற்கு இலவச வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சி மீனவ […]
நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ். தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவு என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரால் எழுந்து நடக்க முடியாது. வீல்சேர் உதவியோடு தான் அவர் தன்னுடைய வேலைகளை செய்து கொள்கிறார். தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பலருடைய நிலை இதுபோல இருந்தாலும் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு வாழ்க்கைத் துணை முக்கியம் என்று புரிந்து கொண்டு தன்னுடைய மகனுக்காக வரன் பார்த்து இருந்த […]