• June 8, 2025

மாவட்ட ஆக்கி சங்க அனுமதி பெறாமல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை; அதிரடி அறிவிப்பு

 மாவட்ட ஆக்கி சங்க அனுமதி பெறாமல் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை; அதிரடி அறிவிப்பு

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி ஆக்கி கழகத்தின் தலைவர் டி.மோகன் அருமைநாயகம், செயலாளர் முனைவர் சி.குரு சித்ர சண்முக பாரதி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவில்பட்டியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி சங்கத்திடம் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்படும் போட்டியில் நமது மாவட்ட ஆக்கி கிளப் வீரர்கள் விளையாட வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம்

மாவட்ட ஆக்கி சங்கத்திடம் அனுமதி பெற்று நடத்தப்படும் போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்கி கிளப் செயலாளர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட ஆக்கி சங்கத்தின் அனுமதி பெறாமல் நடைபெறுகிற போட்டிகளில் நமது சங்க கிளப் வீரர்கள் விளையாடினால் சங்கம் பொறுப்பேற்காது,

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி என்ற பெயரில் போலியாக  பயன்படுத்தி வருவதையும், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்க அனுமதி பெறாமல் முத்திரையைபயன் படுத்தக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதை மீறி ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி ,ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு முத்திரையை அனுமதி இன்றி பயன்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . மாவட்ட ஆக்கி சங்கத்திற்கு எதிராக செயல்படும் உறுப்பினர்கள் மற்றும் அனுமதி பெறாமல் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *