• June 8, 2025

கோவில்பட்டி அருகே வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடிமர கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது  

 கோவில்பட்டி அருகே வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடிமர கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது  

கோவில்பட்டி அருகே திருவேங்கடத்தில் இருந்து  வெம்பக்கோட்டை செல்லும் வழியில் துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வாழைமர  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

சுமார் 150 வருடங்களுக்கு முன் முருகன் மீது அன்பும், ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற அடியவருக்கு காட்சி கொடுத்து நான் வாழைமரத்தில் குடி இருப்பதாக கூறி காட்சி கொடுத்தார்.

இதை தொடர்ந்து வாழைமர பாலசுப்ரமணியர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்து வருகிறார். வேலாயுதம் உருவாகிய கோவிலை அவரது வாரிசுதார்கள் தொடர்ந்து நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். அத்துடன் கோவிலின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறார்கள்.

இந்துக்கள் சாஸ்திரப்படி வீட்டில் நடக்கும் மங்கள நிகழ்ச்சிக்கு வாழைமரம் இடுவது வழக்கம், பெரியவர்கள் வாழ்த்தும் போது வாழையடி வாழையாக வாழ்க என வாழ்த்துவது வழக்கம். காரணம் வாழை மட்டுமே வெட்ட வெட்ட தழைக்கும் மரம். தாய் வாழையை சுற்றி பல சேய் கன்றுகள் வளர்கிறது.

அதனால் ஒருவரின் குலம் தழைக்க வாழைமரத்தை காரணம் காட்டி வாழ்த்துவது வழக்கம். ஆனால் இங்கு வாழைமரமே முருகனாய் இருப்பதால் இங்கு வந்து வணங்குவோருக்கு புத்திர தோஷம் நீங்கி புத்திரபாக்கியம் கிடைப்பது நிச்சயமாகிறது.

வாழைமர பாலசுப்பிரமணியரை மனமுருக வேண்டினால் பேசாத குழந்தை பேசும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இக்கோவில் வந்து வாழைமர பாலசுப்பிரமணியரை வணங்கினால் நோய் நொடியின்றி பெருவாழ்வு வாழலாம் என்பதுஐதீகம் .

இக்கோவிலில். முருகன் சன்னதி மட்டுமல்லாமல்., லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, விஷ்ணு துர்க்கை வெளி பிரகாரத்தில் கன்னி மூலையில் விநாயகர், பூர்ணா புஸ்கலை சமதே ஸ்ரீ கற்குவேல் அய்யனார்., வள்ளி தேவயானை சமேத சுப்ரமணியர் கிழக்கு முகமாகவும், ஜெயவீர ஆஞ்சநேயர், கால பைரவர், சனிபகவானும் தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்கள்.

ஆலயம் முன்பு ஈசானியத்தில் நவக்கிரகங்களுக்கு கோவில் அமைக்கப்பட்டு அருள்பாலிக்கிறார்கள். மேலும் சன்னதியின் எதிரில் புதுப்பொலிவுடன் நந்தவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருமண தோஷம், புத்திர தோஷம் , நோய்களை தீர்க்கும் நிவர்த்தி ஸ்தலமாக அமைந்துள்ள இக்கோவிலில்  தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

சிறப்புமிக்க  வாழைமர பாலசுப்பிரமணியர் கோவிலில்  தற்போது கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மதிய வேளைகளில் அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடந்து வருகிறது.மாலையில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன,.

இந்த விழாவின் இடையே கோவிலில்  கொடி மரம் நிறுவப்பட்டது., இந்த கொடி மரத்திற்கு நாளை  (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 9.10 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் கொடி மரத்திற்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *