எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு; அவதூறு வழக்கில் ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசகூடாது என்று தடை விதித்துள்ள சென்னை ஐகோர்ட், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்க தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல் அமைச்சரும் , அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசியிருந்தார்.
விபத்தில் இறந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடாக வழங்க கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘அதிமுக பொது செயலாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வரும் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் எனக்கு எதிராக பொய்யான, அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்,’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியங்களை பதிவு செய்த வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், முன்பு நவம்பர்.7 இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மனுதாரரான எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசிய தனபால் ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் அவரை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றும் தனபாலுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசகூடாது என்று தடை விதித்துள்ள சென்னை ஐகோர்ட், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்க தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல் அமைச்சரும் , அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசியிருந்தார்.
விபத்தில் இறந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடாக வழங்க கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘அதிமுக பொது செயலாளராகவும், எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வரும் எனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் எனக்கு எதிராக பொய்யான, அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்,’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியங்களை பதிவு செய்த வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன், முன்பு நவம்பர்.7 இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மனுதாரரான எடப்பாடி பழனிசாமியை தொடர்பு படுத்தி பேசிய தனபால் ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக பழனிசாமிக்கு வழங்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் அவரை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றும் தனபாலுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
