• June 8, 2025

மீனவர் கிராம இளைஞர்களுக்கு, கப்பல் படையில் சேர இலவச பயிற்சி

 மீனவர் கிராம இளைஞர்களுக்கு, கப்பல் படையில் சேர இலவச பயிற்சி

தூத்துக்குடி மாவட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மீனவர்களின் வாரிசுகள் வாழ்வு மேம்பட இந்திய கப்பல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையில் (நவிக்) சேர்வதற்கு இலவச வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற உள்ளது. 

இப்பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. இது போல் ஏற்கனவே மூன்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிக்கப்பட்டு மீனவ இளைஞர்கள் பயன்பெற்றுள்ளார்கள். இப்பயிற்சி கடலூர், இராமநாதபுரம், மற்றும் கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பாக மூன்று மாதங்கள் நடைபெறும். 

இப்பயிற்சியில் சேர்வதற்கு தகுதியான மீனவ இளைஞர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பயிற்சியின் போது தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சிகால ஊக்கதொகை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கான படிவங்கள் கடல் காவல் நிலையங்கள், மீனவர்கள் சங்கங்கள், கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் அலுவலகம், ரேசன் கடைகள் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

கல்வி தகுதி /வயது வரம்பு: இப்பயிற்சியில் 18 வயது முதல் 22 வயது வரையும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அரசின் விதிபடி வயதுவரம்பு பரம்பு தளர்வு அளிக்கப்படும். மேலும் விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் 12-ஆம் வகுப்பில் கணிதம், இயல்பியல் பாடபிரிவில் 50% மேல் மதிபெண் பெற்றிருக்கவேண்டும்.

உடற்கூறு உயரம் குறைந்த அளவு 157 செமீ இருத்தல் வேண்டும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு குறைந்த பட்ச அளவில் மத்திய அரசின் ஆணைப்படி தளர்வு அளிக்கப்படும். மார்பளவு அனைத்து வகுப்பினருக்கும் சாதராண நிலையில் 81 செ.மீ விரிவடையும் நிலையில் 86 செ.மீ இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2024 ஆகும்.

இவ்வாறு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *