• June 8, 2025

Month: November 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பரபரப்பு: பிரேக் பிடிக்காததால் கோவில் சுவரில் மோதி பஸ்சை நிறுத்திய டிரைவர்

கோவில்பட்டி புதுரோடு இறக்கத்தில் மெயின்ரோடு சந்திப்பு பகுதி எப்போதும் பிசியாக இருக்கும். போக்குவரத்து போலீஸ் சிறிது நேரம் இல்லாவிட்டாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடும். அதே சமயம் போக்குவரத்து விதிமீறல் சம்பவங்களும் அடிக்கடி நடக்கும். பஸ்  நிறுத்தத்தில் ஒழுங்காக பஸ்சை  நிறுத்தாமல் மெயின்ரோட்டை மறித்து குறுக்காக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும்போது மற்ற வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி வந்த அரசு […]

கோவில்பட்டி

344வது பிறந்தநாள்: வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவர்  344வது பிறந்தநாள் விழா நேற்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள வீரமாமுனிவர் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, புனித பரலோக மாதா பசலிகா பங்கு தந்தை அந்தோணி குரூஸ், காமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு 

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு  கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இந்த தேர்வில் மொத்தம் 35 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தேர்வு குழு உறுப்பினர்களாக செயல்பட்டு காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ், சுரேஷ்குமார், ஆகியோர் வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.  தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம் மற்றும் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் அறிவித்தனர் தேர்வு […]

செய்திகள்

‘மாடுகளை சாலையில் விடாதீர்கள்’ – நடிகை நிக்கி கல்ராணி

அப்சரா ரெட்டியின் அறக்கட்டளை சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளின் பராமரிப்பிற்காக 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- “நாம் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது போல், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவுகளுக்கு நம்மால் முடிந்த தொகையை வழங்கலாம். எனக்கு சிறுவயதில் இருந்தே விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். நாய்கள், பூனைகள் மட்டுமின்றி, […]

சினிமா

தனுஷின் ‘இட்லி கடை’ ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இப்படங்களையடுத்து, தனுஷ் இயக்கி இருக்கும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. […]

தூத்துக்குடி

விமானத்தில் அழுத குழந்தையை சமாதானப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தூத்துக்குடியில்  இருந்து விமானத்தில் சென்னைக்கு சென்றார். அப்போது விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தையை வாங்கி கையில் வைத்து இருந்தார், அந்த குழந்தை திடீரென அழத்தொடங்கி விட்டது. உடனே அமைச்சர் கீதாஜீவன், அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்தார், தாலாட்டுவது போல் குழந்தையை கொஞ்சி சமாதானப்படுத்தினார். ஒருவழியாக குழந்தையின் அழுகை நின்று விட்டது., இந்த காட்சியை அந்த விமானத்தில் பயணம் செய்ட பயணி ஒருவர் படம்பிடித்து […]

கோவில்பட்டி

இரும்புகம்பி ஏற்றி வந்த லாரி மீது பஸ் மோதியதில் 7 பேர் காயம்

மதுரையிலிருந்து இன்று அதிகாலை நாகர்கோவில் நோக்கி, அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சை  கன்னியாகுமரி காந்திகிராமகோடு குளிச்சவிளை பகுதியை சேர்ந்த எட்வின் குமார் என்பவர் ஓட்டினார். இந்த பஸ் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் தொட்டிலோவன்பட்டி மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியது.  இதை சற்றும் எதிரபாராத பஸ்பயணிகள் அலறினார்கள். பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சில் அமர்ந்திருந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தொழில் அதிபர் வீடு, அலுவலகத்தில் வருமானவரி துறை சோதனை

கோவில்பட்டி கடலையூர் ரோடு பங்களா தெரு பகுதியை சேர்ந்தவர் மணி . இவர் .சிவந்திபட்டி – தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை நடத்தி வருகிறாா். .= மேலும் தட்டாா்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் அரவை தொழிற்சாலை நடத்தி வருகிறாா். மேலும் மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சாா் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாா் . ,புதன்கிழமை இவரது வீடு, ஆலை மற்றும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தெருவுக்கு தெரு சுற்றித்திரியும் நாய்கள்; பொதுமக்கள் பீதி

கோவில்பட்டி நகர் முழுவதும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக  சுற்றி வருகின்றன. ஒவ்வொரு தெருவிலும் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவதை காணமுடிகிறது. கோவில்பட்டி ராஜீவ் நகரில் திருப்பதி காலனி முதல் தெருவில் 10 முதல் 15க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன, தெருவில் தேங்கும் குப்பைகளை கிளறி சாலை முழுவதும் பரப்பி விடுகின்றன. மேலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொல்ல்வதுடன் இடைவிடாது குறைக்கின்றன. அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகங்கக்ளில் செல்வோரை துரத்தி செல்வதை காணமுடிகிறது. இதனால் […]