• June 6, 2025

Month: October 2024

சினிமா

நடிகர்களுடன் ஒப்பிடும்போது நடிகைகள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை; மாளவிகா மோகனன் வருத்தம்

மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பிரபாசுடன் தி ராஜா சாப், கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர்களுடன் ஒப்பிடும்போது நடிகைகள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார். […]

செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு வயிற்று பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது தெரியவந்தது. அதை சரிசெய்யும் சிகிச்சைகள் நடந்தது. அவரது இதயத்தில் ரத்தநாளத்தில் ‘ஸ்டென்ட்’ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பூரண குணடைந்து மனைவி லதா மற்றும் உறவினர்கள், டாக்டர்களுடன் வழக்கம்போல பேசினார். ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும்,  2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புத்தக திருவிழாவில்  கலந்துரையாடல் நிகழ்ச்சி

தூத்துக்குடியில் 5 வது  புத்தக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது, சிறப்பு நிகழ்வாக முத்தமிழ் முத்துக்கள் படைப்பாளிகளை பற்றிய கருத்துக்கள் நிகழ்வுகள் ஓவியருடன் கலந்துரையாடல் என முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி ரொட்டீசியா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்று பேசினார்.  சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ் சிற்பிகள் அரங்க ஓவியர் வள்ளிநாயகம் படைப்பும் பகிர்ந்தலும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முத்தமிழ் […]

தூத்துக்குடி

ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பக்தர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் குலசேகரன்பட்டினம் வந்து மாலை அணிந்தனர். தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், செக்காரக்குடி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தசரா பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை அணிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து இன்று காலை சரக்கு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். உடன்குடி அனல்மின் நிலைய பகுதியில் […]

தூத்துக்குடி

ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே திருட்டில் ஈடுபட்ட கார் டிரைவர் கைது

தூத்துக்குடியில் சமீப காலத்தில்  பூட்டி கிடக்கும் வீடுகள் கண்டறியப்பட்டு அவற்றில் கொள்ளை நடப்பது தொடர் கதையாக இருந்து வந்தது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் பதூத்துக்குடி நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பார் மதன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  நேற்று அதிகாலையில் மில்லர்புரத்தில் உள்ள நாராயணன் என்பவரது வீட்டில் இருந்து சிசிடிவி கேமரா , பென் டிரைவ் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றபோது தனிப்படை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாவட்ட ஆக்கி போட்டி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆக்கி கழக செயலாளர் சண்முகவேல் பாண்டியன் நினைவுச் சுழற்கோப்பைக்கான மாவட்ட ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நேற்று  தொடங்கியது. கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்த போட்டியின் தொடக்க விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைத் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். யங் சேலஞ்சர்ஸ்  ஆக்கி கழக செயலாளர் பசுபதி வரவேற்றார். . போட்டிகளை முன்னாள் ஆக்கி வீரர் அன்புராஜ் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் ஆக்கி கழக செயலாளர்கள் […]

பொது தகவல்கள்

முன்னோர்களின் சாபம் தணிய  ஒரு சொம்பு தண்ணீரே சமர்ப்பணம்

அமாவாசை தினத்தில் பெண்கள் ஒரு சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட கோபமும் தணிந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்று விடலாம்.  பெண்கள் திருமணமாகி வந்த பின்பு, அந்தப் பெண்ணினுடைய அம்மா அப்பா தாத்தா பாட்டி, என்று அவர்களுடைய முன்னோர்களை  நினைத்து புகுந்த வீட்டில் வழிபாடு செய்ய முடியாது. இதற்கு நம்முடைய சாஸ்திரமும் இடம் கொடுக்கவில்லை. திருமணமான பெண்ணின் பிறந்த வீட்டுப் பக்கத்தில் இருக்கும் இறந்தவர்களின் ஆத்மாவானது, புகுந்த வீட்டில் வசிக்கும் பெண்ணினுடைய […]

செய்திகள்

ரஜினிகாந்த் நாளை  வீடு திரும்புகிறார்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு, ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தொடர் படப்பிடிப்பு காரணமாக ரஜினிகாந்துக்கு உடல் சோர்வு இருந்தது. மேலும் கடந்த சில நாட்களாக அவருக்கு சிறுநீர் கழிப்பதில் வலி மற்றும் உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 30-ம் தேதி மாலை ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் சிகிச்சை நிபுணரான […]

சினிமா

எனது கருத்துக்களை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன்.; தெலுங்கானா மந்திரி சுரேகா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், சரியான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை. இதற்கிடையே சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் செயல் நிர்வாக தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.தாரக […]