கோவில்பட்டியில் மாவட்ட ஆக்கி போட்டி தொடக்கம்


தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆக்கி கழக செயலாளர் சண்முகவேல் பாண்டியன் நினைவுச் சுழற்கோப்பைக்கான மாவட்ட ஆக்கி போட்டி கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது.
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்த போட்டியின் தொடக்க விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைத் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். யங் சேலஞ்சர்ஸ் ஆக்கி கழக செயலாளர் பசுபதி வரவேற்றார். .
போட்டிகளை முன்னாள் ஆக்கி வீரர் அன்புராஜ் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் ஆக்கி கழக செயலாளர்கள் உமாசங்கர்,கன்னிச்சாமி, பிலிப்,ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் மாவட்டம் முழுவதில் இருந்தும் 21 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போபட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சுப்பிரமணியபுரம் ஆக்கி கழக அணியும்,மாவீரன் சுந்தரலிங்கம் ஆக்கி கழக அணியும் மோதின. இதில்,மாவீரன் சுந்தரலிங்கம் அணியினர் அபாரமாக ஆடி 6 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
2-வது போட்டியில் தந்தை ஞானமுத்து ஆக்கிக்கழக அணியுடன் பிலிப்ஸ் ஆக்கி கழக அணி மோதியது.இதில், 3 – 0 என்ற கோல் கணக்கில் பிலிப்ஸ் ஆக்கி கழக அணி வெற்றி பெற்றது.
6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு,வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன
