• June 8, 2025

Month: October 2024

கோவில்பட்டி

அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ்ப்புலிகள் கட்சி

கோவில்பட்டி, கயத்தாறு விளாத்திகுளம், உள்ளிட்ட பகுதிகளில் அருந்ததியர் சமுதாய  மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார்.. துணை செயலாளர் கணேசன், நிதி செயலாளர் ஜெயராம் என்ற மகிழ்வேந்தன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளை வேந்தன், வெள்ளைச்சாமி, ஊடகப்பிரிவைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து […]

சினிமா

சாதனை படைத்த ‘விண்ணை தாண்டி வருவாயா’: ரீ-ரிலீஸில் 1000 நாட்கள்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் – ஜெஸியின் காதல் ரசிகர்களை.,படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டி போட்டுள்ளது.2010-ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்ப படமாகவே நீடிக்கிறது. திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் சிறப்பு திரையிடலை கண்டு வருகிறது. முக்கியமாக, சென்னை அண்ணா நகரில் உள்ள […]

செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி

பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக  குஜராத் பல்கலைக்கழகம் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சஞ்சய் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பு குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த  குஜராத்  ஐகோர்ட்டு, […]

கோவில்பட்டி

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த முகாம் நடைபெறுகிறது.முகாமில் பங்கேற்கும் பொது மக்களிடம் அதிகாரி எடுத்த விசாரணைக்கு பிறகு காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ( திங்கட்கிழமை) விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் தொடங்கியது. ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம்  உள்ளவர்களுக்கு இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். அகில இந்திய ஊழியர் சங்கத்தின் 16-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு  கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நிலுவையில் உள்ள டி.ஏ. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மருத்துவபடி, மருத்துவ அலவன்ஸ் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 3-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும். சென்னை ஊழியர் சொசைட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி, 5ஜி சேவையை […]

செய்திகள்

அதிமுகவில் நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு

நடிகை கவுதமி கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வந்தார். பின்னர் சில காரணங்களால் பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகிய கவுதமி, கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரையும் மேற்கொண்டார். இதேபோல பாஜகவில் இருந்த தடா பெரியசாமி, கட்சியில் இருந்து விலகி அவரும் அதிமுகவில் ஐக்கியமானார். இந்த நிலையில் இருவருக்கும் அதிமுகவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக […]

கோவில்பட்டி

பட்டாக்களை கிராமக்கணக்கில் பதிவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்துக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனி, கணேஷ் நகர் கிழக்குப்பகுதி, இந்திரா காலனி பகுதிகளில் வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்களுக்கு, வீடுகளின் பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டுகட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கரும்பன்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்லையா,ரஞ்சனி கண்ணம்மா,நகர உதவிச் செயலாளர் அலாவுதீன், இளைஞர் பெருமன்ற நகரச் […]

செய்திகள்

உலககோப்பை வில்வித்தை: 5-வது முறையாக வெள்ளி பதக்கம் வென்றார் தீபிகா குமாரி

2024-ம் ஆண்டிற்கான வில்வித்தை உலககோப்பை இறுதிப்போட்டி, மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டிக்கு சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர். இதில் லி ஜியாமனிடம்., 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார் தீபிகா குமாரி. வில்வித்தை உலக கோப்பையில், தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வெல்வது இது ஐந்தாவது முறையாகும். இதற்கு முன் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டிகளில் நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றுள்ளார். சீன வீராங்கனை […]

செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்த தமிழக அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. சூப்பர்வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. […]

செய்திகள்

திமுகவின் கடைசி தொண்டன் உள்ளவரை தமிழ்த்தாய் வாழ்த்தை தொட முடியாது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியோடே இந்தி மாத நிறைவு கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டன. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது அதை மட்டும் புறக்கணித்துவிட்டு அடுத்த வரியிலிருந்து பாடலை பாடிய சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியது. பல அரசியல் தலைவர்கள் இந்த செயலுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர். துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]