• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

இந்தியாவை எந்த நாடும் நிராகரிக்க முடியாது: நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவின் வாஷிங்டனில், உலக வளர்ச்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். இதில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- தொலைதூர நாடான அமெரிக்காவாக இருக்கட்டும், அண்டை நாடான சீனாவாக இருக்கட்டும், எந்த ஒரு நாட்டினாலும், இந்தியாவை புறக்கணிக்க முடியாது. இந்தியா ஜனநாயகம் மிக்க நாடு. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், தனது செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், உலகில் உள்ள ஒவ்வொரு 6 நபர்களிலும் […]

சினிமா

வெளியானது “அச்சமில்லை அச்சமில்லை” என தொடங்கும் அமரன் படத்தின் டிரெய்லர்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘அமரன்’ திரைப்படம் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் […]

செய்திகள்

இலங்கை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்று அசத்தியது. இதனையடுத்து நியூசிலாந்து அணி தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணியானது மீண்டும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் […]

சினிமா

விஜய் சேதுபதி உடன் இணையும் இயக்குனர் பாண்டிராஜ்: விரைவில் படப்பிடிப்பு

‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதிய படப்பிடிப்பில் இறங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது. இதில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிக்கிறது. […]

செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலியை முந்திய ரிஷப் பண்ட்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீர்ர ஜோ ரூட் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு கோலியை தாண்டி 6-வது இடத்திலும், விராட் கோலி (ஒரு […]

செய்திகள்

மதுரையில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாக்களில் தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர்கள், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், மருதுபாண்டியார் நினைவு தினம் மற்றும் […]

செய்திகள்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: புதுச்சேரி அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் வருகின்ற 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகள் கூட்டமாக காணப்படுகின்றன. பொதுமக்களின் பொருளாதார நிலையை சீர்படுத்தும் வகையில் மத்திய,மாநில அரசுள் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரி அரசு பணியில் ஈடுபட்டுள்ள குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7000 அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரி அரசின் நிதி துறை சார்பு செயலர் சிவகுமார் இந்த […]

செய்திகள்

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, தனது வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், வரும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளார்.ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களுடன் பிரம்மாண்ட வாகன பேரணியில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர். இதன் […]

செய்திகள்

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை: டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சிறைத்துறை டிஐஜி-யின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, டிஐஜி வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் பணம் காணாமல் போனதற்கும் சிவக்குமார் மீது சந்தேகப்பட்டு அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, சிவக்குமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் […]