• June 8, 2025

Month: October 2024

செய்திகள்

”தமிழ்த்தாய் வாழ்த்து”-மீண்டும் பிரச்சினையை கிளப்பிவிட வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 25) வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினர். அப்போது கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், புகழ் மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என்றும் பாடினர். மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால் , திராவிட நல் திருநாடும் என்ற வரியில் […]

செய்திகள்

பிரபல தாதா பிஷ்னோயின் சகோதரர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம்: என்ஐஏ

பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் கொலை சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் பொறுப்பேற்றது நாட்டையே உலுக்கியது. ஹிந்தி நடிகர் சல்மான் கானை […]

செய்திகள்

அக்டோபர் 30-ம் தேதி கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்தநாள் விழா மற்றும் 62-வது குருபூஜை விழா கொண்டாடப்படுகின்றது. பசும்பொன்னில் உள்ள அவருடைய நினைவிடத்தில் குருபூஜை விழா நடைபெறும் இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருகை தருகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கான முன்னேற்பாடுகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 17 ஆண்டுக்கு பிறகு 100 மி.மீ.அளவை கடந்த மழை

கோவில்பட்டி முழுவதும் கடந்த 23-ந் தேதி சுமார் 2  மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இடியுடன் கன மழை கொட்டியது. குறுகிய நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை கோவில்பட்டியில் பதிவானது. 24 மணி நேரத்தில் கோவில்பட்டியில் 110 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த மழை, கடந்த 33 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில், ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச மழை ஆகும். கோவில்பட்டியில் கடந்த 33 ஆண்டுகளில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவுகள்:- […]

பொது தகவல்கள்

ஆதார் கார்டு உண்மையானதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி ?

ஆதார் கார்டு என்பது இந்தியாவில் அரசு சேவைகளைப் பெறுவதற்கும், வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கும், பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளத்தைச் சரிபார்க்கவும் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் முகவரி தொடர்பான தகவல்கள் இருக்கும்.  இது தனித்துவமான 12 இலக்க எண்ணாகும். சிலர் போலியாக ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுடைய நம்பகத்தன்மை குறித்து சரி பார்ப்பது முக்கியம். வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தால் […]

செய்திகள்

போதை பொருள் கடத்தல் வழக்கு: முன்னாள் டிஜிபி மகன் கைது

சென்னையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் டிஜிபி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துணை ஆணையர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னை நந்தம்பாக்கத்தில் போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று (அக்டோபர் 24) தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, […]

செய்திகள்

டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு, ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டதோடு, எந்த அணிக்கும் கேப்டனாக விளையாட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கேப்டனாக டேவிட் […]

செய்திகள்

கழக கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்: தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தவெக தலைவரும், நடிகருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றி கொள்கை திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழ போகும் தருணம். நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2 பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் திறப்பு

தூத்துக்குடி சத்திரம் தெருவில், மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் திறப்பு விழா திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு ரூ. 2.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் மற்றும் ரூ. 1.38 கோடி மதிப்பீட்டில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து […]

செய்திகள்

கரையை கடந்தது டானா புயல்: ஒடிசாவில் பலத்த சேதம்-வேரோடு சாய்ந்த மரங்கள்

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டானா, தீவிர புயலாக நள்ளிரவில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே இரவு 1.30 மணி முதல் 3.30 மணி வரை கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புயல் கரையை கடக்கையில் மணிக்கு 100-110 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசியதாகவும், ஒடிசா மற்றும் […]