தூத்துக்குடியில் 2 பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் திறப்பு
தூத்துக்குடி சத்திரம் தெருவில், மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் திறப்பு விழா திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு ரூ. 2.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் மற்றும் ரூ. 1.38 கோடி மதிப்பீட்டில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, மாணவ – மாணவிகளுக்கு கனிமொழி எம்.பி இனிப்பு வழங்கினார்.
இவ்விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.