கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்தார். தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஓட்டப்பிடாரம் வட்டம் முறம்பன்குளத்தில் நீர்வளத்துறையின் மூலம் ரூ.36 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை ஆட்சியர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் .லட்சுமிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டு, மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் […]
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்; தூத்துக்குடியில் 26-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடி.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் Reliance Jio Infocomm நிறுவனத்திற்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.7.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4360 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட […]
மத்திய அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினராக மாற்றும் முயற்சி; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு டி. ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- தேர்தலில் வெற்றி பெற்றதால் திமுக அரசுக்கு திமிர் அதிகமாகிவிட்டது. நம் பணத்தை வாங்கி நமக்கே கொடுக்கிறார்கள். ஒரு மத்திய அரசு ஊழியர் […]
கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை, சரியான நேரத்தில் திறக்காததால் வளர்ப்பு நாயுடன் வியாபாரி மறியல்
. கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்., கோபால் நேற்று காலை 7.30 மணிக்கு தனது வீட்டில் வளரும் நாய்க்கு தடுப்பூசி போடுவதற்காக எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு வந்தார். வழக்கமாக 8 மணிக்கு திறக்க வேண்டிய கால்நடை மருத்துவமனை 8.30 மணிக்கு பின்னரும் திறக்கப்படவில்லை. அங்கு பணியாற்றும் அலுவலர்களும் யாருமில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோபால் தனது வளர்ப்பு […]
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடை காரணம் காட்டி அவற்றை வழங்காமல் நிறுத்தியதை கண்டித்தும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். […]
கோவில்பட்டி லயன்ஸ் கிளப் ஆப் டெம்பிள் சிட்டி சார்பில் சாலயோர வியாபாரிகளுக்கு இலவச குடைகள் வழங்கப்பட்டன. செருப்பு தைய்க்கும் தொழிலாளி, கரும்பு ஜூஸ் கடைக்காரர், எலுமிச்சை வியாபாரி உள்பட 5 பேருக்கு இந்த குடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் பட்டைய தலைவர் முருகேசன். தலைவர் முருகேஷ், செயலாளர் கண்ணன். பொருளாளர் பாலமுருகன், கிளப் அட்மின் ஜி.எம்.துரைப்பாண்டியன், ஜெயபால், பாலசுந்தர் மற்றும் கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர் .