ரிலையன்ஸ் நிறுவனத்திற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்; தூத்துக்குடியில் 26-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி.மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் Reliance Jio Infocomm நிறுவனத்திற்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.7.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4360 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள்(பொறியாளர்கள் தவிர) கலந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பகுதிநேரம் அல்லது முழுநேரம் பணிபுரியவிருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விசான்றுகளுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் இவ்வலுவலக தொலைபேசி எண் 0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
,
