தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆலம்பட்டி மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கோவில்பட்டி கடலைகார தெருவை சேர்ந்த பாண்டிமணி (30),ரகுபதி (29) மற்றும் மந்திதோப்பு ரோடு பகுதியைச் […]
கோவில்பட்டி மாதாங்கோவில் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இன்று காலை பஸ் நிலைய பகுதியிலிருந்து மெயின் ரோட்டில் வந்த ஒரு கார், மாதாங்கோவில் தெரு சந்திப்பில் சில வினாடிகள் நின்றது. பின்னர் அந்த கார், சாலையில் திரும்பியது.அப்போது மெயின் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற ஒரு சைக்கிள் மீது லேசாக இடித்து விட்டு, மாதாங் கோவில் சாலையில் திருப்பத்தில் நின்ற ஒரு ஸ்கூட்டரை இடித்து தள்ளி விட்டு டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தெரு […]
தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்குபடையெடுத்து வருகிறார்கள். மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் தற்போது வெயில் ஓரளவு அடித்தாலும் அங்கு ஜில் என்று வீசும் காற்று காரணமாக வெயில் கொடுமை தெரிவதில்லை. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா முடிந்த நிலையில் அரசியல்வாதிகள் பலர் கொடைக்கானலில் முகாமிட்டு உள்ளனர். அமைச்சர்கள் சிலர் இங்கு […]
விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதில் கால்நடை மருத்துவர்களின் பங்கு முக்கியமானதாகும். கால்நடை மருத்துவர்களை கவுரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை உலக கால்நடை மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எட்வின் தலைமை தாங்கினார்.வனத்துறை அலுவலர்கள் பிரசன்னா, பாலகுமார் […]
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா இன்று (26 4 2024 )வெள்ளி மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடியை காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அருட்திரு அந்தோணி அ.குருஸ் அடிகளார் ,திருச்சி புனித பவுல் குருமடம் அருட்திரு ராஜேஷ் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார் மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து பங்கு தந்தையர் பங்களாவில் இருந்து பவனியாக எடுத்து வந்தனர். உலகின் சமாதானத்திற்காக வெள்ளை நிற புறா […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக தலைவர் க.தமிழரசன் தலைமையில் பலர் இன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பிரதமர் நரேந்திரமோடி மீது புகார் மனு அளித்தனர். அந்த புகாரில், “தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும் மதவெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியும் தேர்தல், விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் நடந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. புகாரை சப் […]
சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் அறிவித்த போராட்டம் தொடர்பாக கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் மே 9ந்தேதி அகற்றப்படும் என்று கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி கழிப்பிடம் முன் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து, திடீரென கடை அமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு புறம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில்பட்டி கோட்டாட்சியர் நடவடிக்கை […]
கோவில்பட்டி நகரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 26ந்தேதி பட்டினி போராட்டம் நடத்த போவதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர். இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜோன் கிறிஸ்டி பாய் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மே.9ந்தேதி கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுவது , இன்று முதல் தற்காலிக கடைகளுக்கு உரிமைக் கட்டணம் வசூலிப்பதை […]
செண்பகவல்லி அம்மன் கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் மகா அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் ஒலித்த பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் 63 நாயன்மார்களில் ஒருவரான திருக்குறிப்பு தொண்டர் நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் ஸ்ரீ திருக்குறிப்பு […]
தமிழ்மொழி விழா 2024இன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், 20 ஏப்ரல் 2024 அன்று “ஆற்றல் வளர்க்க விரும்பு!” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த எழுத்தாளரும் தன்முனைப்பு பேச்சாளருமான முனைவர் வெ. இறையன்பு ஆற்றல் வளர்க்கும் வழிகளை கருப்பொருளாகக் கொண்டு சிறப்புரையாற்றினார். ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். […]