• May 9, 2024

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

 தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின் பேரில் கோவில்பட்டி  துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில்  மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்  செந்தில்குமார் மற்றும் போலீசார் ஆலம்பட்டி மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கோவில்பட்டி கடலைகார தெருவை சேர்ந்த  பாண்டிமணி (30),ரகுபதி (29) மற்றும் மந்திதோப்பு ரோடு பகுதியைச் சேர்ந்த  ரஞ்சித் (33) ஆகிய 3 பேரும் சேர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.2லட்சத்து 25ஆயிரத்து 930  மதிப்புள்ள 346 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *