• May 9, 2024

கொடைக்கானலில் அரசியல்வாதிகள் முகாம் ; முதல் அமைச்சர் ஸ்டாலின் 29-ந்தேதி வருகை 

 கொடைக்கானலில் அரசியல்வாதிகள் முகாம் ; முதல் அமைச்சர் ஸ்டாலின் 29-ந்தேதி வருகை 

 தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்குபடையெடுத்து வருகிறார்கள்.

 மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் தற்போது வெயில் ஓரளவு அடித்தாலும் அங்கு ஜில் என்று வீசும் காற்று காரணமாக வெயில் கொடுமை தெரிவதில்லை.

 இதன் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா முடிந்த நிலையில் அரசியல்வாதிகள் பலர் கொடைக்கானலில் 

முகாமிட்டு உள்ளனர். அமைச்சர்கள் சிலர் இங்கு தங்கி உள்ளனர்.

 பாஜக மாநில தலைவர் அண்ணாமலைகொடைக்கானலில் தங்கி இருக்கிறார். அவர் நாளை கிளம்புகிறார்.

 இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், கொடைக்கானல் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 29ஆம் தேதி கொடைக்கானல் வரும் மு க ஸ்டாலின், 5 நாட்கள் வரை தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *