• June 7, 2025

Month: February 2024

செய்திகள்

கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 118 அடி உயர கம்பத்தில் தேமுதிக  கொடி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று (12.2.2024) 24 வது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு 118 அடி உயரம் கொண்ட கொடிகம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் டாக்டர்.வி. இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் , முன்னாள் எம். எள். ஏ.பார்த்தசாரதி உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்ட கழக செயலாளர்கள், […]

கோவில்பட்டி

சாலை பணியாளர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி முதல் -அமைச்சருக்கு மனு அனுப்பும்

 தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் இன்று காலை கோவில்பட்டியில் நடைபெற்றது.  தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, கோவில்பட்டி வட்ட தலைவர் வெள்ளைச்சாமி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மாரிமுத்து துணை செயலாளர் சௌந்தரராஜன்,பொருளாளர் ஆறுமுக உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஒவ்வொருவரும் தங்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பும் வகையில் […]

கோவில்பட்டி

தூத்துக்குடியில் பிரசாந்த் ரசிகர் மன்றம் சார்பில் 100 பேருக்கு தலைக்கவசம்

 தூத்துக்குடி வி. ஓ. சி. கல்லூரி அருகே பிரசாந்த் ரசிகர் மன்றம் சார்பில் 100 பேருக்கு தலைக்கவசம்(ஹெல்மெட் ) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பிரசாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் முரளி முன்னிலை வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் கோவில்பட்டி மைக்கேல்அமலதாஸ் வரவேற்று பேசினார்.  தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் 300 பேருக்கு தலை கவசங்களை வழங்கினார்.  அவர் பேசுகையில் இருசக்கர […]

கோவில்பட்டி

தேமுதிக கொடி நாள் விழா கொண்டாட்டம் 

தேசியமுற்போக்கு திராவிடகழகம்  பிப்ரவரி 12 ல் கொடியை வல்லரசு திரைப்படத்தில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிமுகம் செய்தார் அதை தேமுதிக வினர் கொடிநாளாக கொண்டாடி வருகின்றனர் தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் விஜயாபுரியில் இன்று கேப்டன் விஜயகாந்த் திருவுருவம்பட விஜயாபுரி கிளைகழக பலகையை மாவட்ட செயலாளர் சுரேஷ் திறந்து கொடி ஏற்றி  வைத்தார். பின்னர் பொதுமக்கள்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவுக்கு மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் மணிகண்டன், ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்கள். மாநில […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மகாதேவா சிவன் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நாளை நிறைவு 

 கோவில்பட்டி அருகே கணபதி பட்டி சாய் அமர் நகரில் மகாதேவா சிவன் கோவிலில் கடந்த 2ம் தேதி  கொடியேற்றத்துடன் மகா ஹோம பூஜைகள் தொடங்கி  நடைபெற்று வருகிறது.  ஒவ்வொரு நாளும் ஹோம பூஜைகளும் சிவனுக்கு.சிறப்பு அபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நாளை 13ம் தேதி வரையிலும் சிறப்பு யாக பூஜைகள் நடக்க இருக்கிறது. தினமும் அதிகாலை முதல் கணபதி ஹோமம், சுதர்சன் ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காயத்திரி ஹோமம், மிருத்யுஞ்ஜய.ஹோமம், விஷ்வ சாந்தி, ருத்ர சமூஹ ஹோமம் மற்றும் […]

செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், கோவையில் இன்று மனுக்கள் பெற்றனர் 

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி  எம்.பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் இன்று (10/2/2024) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.  இக்கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், திமுக  நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற […]

கோவில்பட்டி

கல்வி, ஒழுக்கத்தின் மூலம்  மாணவிகள் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு  செல்ல வேண்டும்; பள்ளி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. இதையொட்டி பள்ளி வளாகத்தில் மன்றங்களின் சாதனைகளை பதாகைகளாக வைக்கப்பட்டு மாணவிகள் பரையிட்டனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 10 மற்றும் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும்,பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குமாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கினார். கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி,மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் […]

செய்திகள்

ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சுற்றுப்பயணம்

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் அந்த குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். இன்று (9/2/2024) ஒசூா் – தளி சாலை ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் இந்த குழுவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 10,000 தீபம் ஏற்றி வழிபாடு

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு பத்ர தீபம் விழா நடைபெற்றது.  அதாவது கோவில் முழுக்க 10 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்துவதே ஆகும்.  இதற்காக பக்தர்கள் அகல் விளக்கு, எண்ணெய், திரி ஆகியவற்றை வழங்கினார்கள். மாலை 5 மணி அளவில் பெண் பக்தர்கள் அதிகமானோர் கோவிலுக்கு வந்து அகல் விளக்குகளை ஏற்ற தொடங்கினார்கள். மேலும் வெள்ளி குத்துவிளக்குகளும் சில இடங்களில் ஏற்றி வைக்கப்பட்டன. […]

தூத்துக்குடி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில்  இன்று( 9.2.2024) கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அதிரடிப்படை காவல்துறை தலைவர் டாக்டர் எஸ். முருகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழி விவரம் வருமாறு :-  “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் […]