கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 10,000 தீபம் ஏற்றி வழிபாடு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாத சுவாமி கோவிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு பத்ர தீபம் விழா நடைபெற்றது.
அதாவது கோவில் முழுக்க 10 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்துவதே ஆகும்.
இதற்காக பக்தர்கள் அகல் விளக்கு, எண்ணெய், திரி ஆகியவற்றை வழங்கினார்கள். மாலை 5 மணி அளவில் பெண் பக்தர்கள் அதிகமானோர் கோவிலுக்கு வந்து அகல் விளக்குகளை ஏற்ற தொடங்கினார்கள்.





மேலும் வெள்ளி குத்துவிளக்குகளும் சில இடங்களில் ஏற்றி வைக்கப்பட்டன. 6 மணியளவில் கோவில் முழுக்க அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு பளிச் என மின்னின.
பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்
