கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் 118 அடி உயர கம்பத்தில் தேமுதிக கொடி

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று (12.2.2024) 24 வது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு 118 அடி உயரம் கொண்ட கொடிகம்பத்தில் தேமுதிக கொடியை ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத்தலைவர் டாக்டர்.வி. இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் , முன்னாள் எம். எள். ஏ.பார்த்தசாரதி உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்ட கழக செயலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
