திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், கோவையில் இன்று மனுக்கள் பெற்றனர்

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் இன்று (10/2/2024) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.
இக்கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்துத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் மற்றும் தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், தி.மு.க மாணவர் அணி செயலாளர்.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி, தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பரிந்துரைகளை மக்களிடமிருந்து பெற்றனர்.
மேலும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ), கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
