கோவில்பட்டி அருகே மகாதேவா சிவன் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நாளை நிறைவு

கோவில்பட்டி அருகே கணபதி பட்டி சாய் அமர் நகரில் மகாதேவா சிவன் கோவிலில் கடந்த
2ம் தேதி கொடியேற்றத்துடன் மகா ஹோம பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஹோம பூஜைகளும் சிவனுக்கு.சிறப்பு அபிஷேகங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நாளை 13ம் தேதி வரையிலும் சிறப்பு யாக பூஜைகள் நடக்க இருக்கிறது.
தினமும் அதிகாலை முதல் கணபதி ஹோமம், சுதர்சன் ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காயத்திரி ஹோமம், மிருத்யுஞ்ஜய.ஹோமம்,
விஷ்வ சாந்தி, ருத்ர சமூஹ ஹோமம் மற்றும் சண்டிகா ஹோமம், ருத்ர ஹோமம், நட்சத்திர ஹோமம் பூர்ணா குதி யாகம், சன்யாச பூஜை நடைபெறுகிறது.
நேற்று தேவயாக சாலை பூஜையில் 1008 கலசத்துடன் பூஜை செய்து பின்னர் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவபெருமானுக்கு சிறப்பு பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெற்றது.

யாகத்திற்கு மகா மண்டலேஷ்வர்.ஸ்வாமி பிரபாகரன்ந்தா சரஸ்வதி சுவாமிகள்
தலைமை தாங்கி நடத்தி அருளாசி வழங்கினார்.
டெல்லி ஆனந்த சைதன்ய நாத சுவாமி,, பெங்களூர் ஸ்ரீ நாராயணாந்த் கிரி மஹாராஜ், அகில பாரத சன்யாசி சங்கத்தின் நிறுவனர் ராமானந்தா பூரி மஹோராஜ், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனமூர்த்தி கலந்து கொண்டார். மேலும் ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த யாக பூஜையில் 108 சன்னியாசிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். யாகத்திற்கு கோவில்பட்டியில் இருந்தும் கேரளா. கர்நாடகா உத்தரப்பிரதேசம். டெல்லி
வாரணாசி முக்கிய பிரமுகர்கள் தினந்தோறும் கலந்து கொண்டு வருகின்றனர்
இந்த யாகத்திற்கு முழு பொறுப்பேற்று கோவில் ஸ்தபாகர் சுரேஷ் நடத்தி வருகிறார். மேற்பார்வையாளராக
பிஜு. செயல்பட்டார்.
