தூத்துக்குடியில் பிரசாந்த் ரசிகர் மன்றம் சார்பில் 100 பேருக்கு தலைக்கவசம்

தூத்துக்குடி வி. ஓ. சி. கல்லூரி அருகே பிரசாந்த் ரசிகர் மன்றம் சார்பில் 100 பேருக்கு தலைக்கவசம்(ஹெல்மெட் ) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிரசாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் முரளி முன்னிலை வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் கோவில்பட்டி மைக்கேல்அமலதாஸ் வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் 300 பேருக்கு தலை கவசங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி கண்டிப்பாக தலைக்கவசம் அடைந்து பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பேசினார்.
நிகழ்ச்சியில் பிரசாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கருப்பசாமி, முத்துவேல்,ஆண்டி சாமி, மாரிமுத்துஉள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்ற நிர்வாகி முருகன் நன்றி கூறினார்.
ஏற்கனவே கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் மொத்தம் 500 பேருக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டுள்ளதாக பிரசாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
