• June 7, 2025

Month: December 2023

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு கலைகல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்களாக சேர்ப்பு

கோவில்பட்டி அரசு கலை கல்லூரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி.  தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம், அரசு கலை கல்லூhயில் பயிலும் மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி.  தலைமையில் இன்று நடைபெற்றது. முகாமில் வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிருஸ்டி பாய், வட்டாட்சியர் லெனின், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நிர்மலா, மாணவ மற்றும் […]

செய்திகள்

தண்ணீரிலும் கண்ணீரிலும் இராயபுரம்… டி.ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அவரிடம் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விளக்கினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தார் இது பற்றி டி.ஜெயக்குமார் முகநூல் வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- தண்ணீரிலும் கண்ணீரிலும் இராயபுரம்! .மக்கள் வாழும் இடங்களில் தண்ணீரை அகற்ற ஒரு இயந்திரமும் கூட வரவில்லை! இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கூட வழியில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் […]

செய்திகள்

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு  

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ,தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை […]

தூத்துக்குடி

சென்னை மக்களுக்கு தூத்துக்குடியில் இருந்து நிவாரண பொருட்கள்

புயலால் பாதிக்கப்பட்ட சென்னை 186-வது வார்டு  ராம் நகர் பகுதி மக்களுக்கு. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர .கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. .மார்கண்டேயன் ஆகியோர்  நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ,முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அரிசி, ரொட்டி, பிஸ்கட், சர்க்கரை, துவரம்பருப்பு தண்ணீர் பாட்டில்கள் போன்ற நிவாரண பொருட்கள் தூத்துக்குடியில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த் நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் […]

கோவில்பட்டி

சிறுவர், சிறுமியர்களின் ஓவியம், புகைப்பட கண்காட்சி

கோவில்பட்டி சிடார் பேப்பர் போட் நிறுவனம் சார்பில் தாமஸ் நகர் சமுதாயகூடத்தில் சிறுவர், சிறுமியர்களின் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் சிறுவர், சிறுமியர்களின் படைப்புகள் இடம் பெற்று இருந்தன. கண்காட்சி தொடக்க விழாவுக்கு தமிழ் பாப்திஸ்து பள்ளி தாளாளர்  லால்பகதூர் கென்னடி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜெயந்தி, கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், 7-வது வார்டு கவுன்சிலர் அற்புதமணி பிரபாகரன், பி.எஸ்.பால்ராஜ் பொதுநலசேவை அறக்கட்டளை அம்பேத்கர், […]

கோவில்பட்டி

 ஷெக்கினா இசைப்பள்ளி நடத்தும் கிறிஸ்துமஸ் பாடல் போட்டி; 18 முதல் 24-ந்தேதி வரை

கோவில்பட்டி ஷெக்கினா இசைப்பள்ளியின் சார்பாக, கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகள் என்ற பெயரில், சர்வதேச அளவிலான ஓர் இசை மற்றும் பாடல் போட்டிகள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை மாணவ, மாணவிகள், இசை ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டியில் கலந்து  கொள்வோர்  ரூ.200 நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். போட்டியாளர்கள்  கீபோர்டு, கித்தார், வயலின், பியானோ, புளுட் , வீணை, டிரம்ஸ், ரிதம் பேட், மிருதங்கம், ஆர்மோனியம் ஆகிய வாத்திய கருவிகளை பயன்படுத்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி லக்குமி ஆலை பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சி

கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை,மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் கோவில்பட்டி லக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஆரோக்கியமான வாழ்வியல் பயிற்சி பட்டறை நடத்தின.. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை தாங்கினார். தொடக்க கல்வி உதவி திட்ட அலுவலர் விநாயகம், லக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம்புவனம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை: 97 புதிய கடைகள், உணவகம் குத்தகை பொது

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வருமாறு:- கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை பொதுமக்களின் பாதுகாப்பு நலம் மற்றும் நகராட்சி நிர்வாக நலன் கருதி இடித்து அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் அனைத்து வசதிகளுடன் கூடிய தினசரி சந்தை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த தினசரி சந்தையில் தற்போது 97 கடைகள். கழிப்பறை வசதி. கேண்டீன் வசதி, ஓட்டுனர் ஓய்வு அறை மற்றும் இருசக்கர, நான்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தின் சர்வீஸ் ரோடு பணியை வேகப்படுத்தகோரி இந்திய கம்யூனிஸ்டு

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்கபாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் கழிவுநீர் ஊற்று காரணமாக நடுப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி சுகாதார கேடுகள் பெருகி வருகிறது. மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி  போக்குவரத்து நிறுத்தப்படும். மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டவுடன் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இந்த சூழல் பாலம் அமைந்ததில் இருந்து ஏற்பட்டு  வருகிறது. மேலும் பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றுவதற்கு காலக்கெடு கொடுக்கப்பட்டு அது முடிந்து விட்டது. இருப்பினும் […]

செய்திகள்

சென்னையில் மழை பாதிப்பு : அ. தி. மு. க. வினர் சொந்த

சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.யின் போது  டி. ஜெயக்குமார் கூறியதாவது :- கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.அதுபோல புளுகு மூட்டைக்கு சொந்தகாரராக இருக்கின்றது இந்த அரசு.பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லாமல் போய்விட்டது.வானளவில் பொய் சொல்கிறார்கள்.மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வெள்ளம் வடிந்துவிட்டது என்கிறார்கள். அனைத்து இடங்களிலும் மார்பளவு, இடுப்பளவு தண்ணீர் இருக்கும் நிலைதான் உள்ளது. ராயபுரம் தொகுதி […]