கோவில்பட்டி லக்குமி ஆலை பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சி

கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை,மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில் கோவில்பட்டி லக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் ஆரோக்கியமான வாழ்வியல் பயிற்சி பட்டறை நடத்தின.. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை தாங்கினார்.
தொடக்க கல்வி உதவி திட்ட அலுவலர் விநாயகம், லக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம்புவனம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி பயிற்சி பட்டறையை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
.மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் பிரபாகுமார், தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கலைப்பொருட்களின் கண்காட்சியை தொடக்கி வைத்தார்..
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வக பணியாளர்கள் முகுந்தன்,மகாராஜா ஆகியோர் தண்ணீரின் தன்மைகள் குறித்து பேசினார்கள். வேளாண் ஆர்வலர் சுரேஷ்குமார் காகித பை தயாரித்தல், விதைப்பந்து தயாரித்தல்,வேளாண் ஆசிரியர் காளிராஜ் குப்பைகளிலிருந்து பயனுள்ள பொருட்கள் தயாரித்தல், வனவர் கேசவன் மரக்கன்று நடுதல், பராமரித்தல் ,கலைமுதுமணி ராமமூர்த்தி தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கலை பொருட்களாக மாற்றுதல் பற்றியும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
