கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை: 97 புதிய கடைகள், உணவகம் குத்தகை பொது ஏலம்

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வருமாறு:-
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை பொதுமக்களின் பாதுகாப்பு நலம் மற்றும் நகராட்சி நிர்வாக நலன் கருதி இடித்து அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் அனைத்து வசதிகளுடன் கூடிய தினசரி சந்தை புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த தினசரி சந்தையில் தற்போது 97 கடைகள். கழிப்பறை வசதி. கேண்டீன் வசதி, ஓட்டுனர் ஓய்வு அறை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன காப்பகங்கள், அனைத்து பகுதிகளுக்கும் எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட தினசரி சந்தை 6.87 லட்சம் செலவில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கீழ்க்கண்ட கட்டமைப்பு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. மேலும் நகராட்சியின் வருவாயை கருத்தில் கொண்டு 2015 -2016ம் ஆண்டுக்கான குத்தகை ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன் ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி மூலம் கீழ்க்கண்ட விபரப்படி கடைகளை பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி மூலம் கீழ்க்கண்ட விபரப்படி கடைகளை பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரவும் அதற்கான விளம்பர செலவுகளுக்கு மன்றத்தின் ஒப்புதலுக்கும் பார்வைக்கும் பதிவிற்கும் வைக்கப்படுகிறது.
*A பிளாக்கில் தரைத்தள கடைகள் 10X10 அளவில் 49 கடைகள் . ஒவ்வொரு கடைக்கும் முன்வைப்பு தொகை ரூ.10 லட்சம்.
*20 X10 அளவில் 7 கடைகள். ஒவ்வொரு கடைக்கும் முன் வைப்புத்தொகை ரூ.20 லட்சம்
*20 X20 அளவில் ஒரு கடை. முன் வைப்பு தொகை ரூ.40 லட்சம்.
B பிளாக் தரைத்தள கடைகள் 10X10 அளவில் 36 கடைகள். ஒவ்வொரு கடைக்கும் முன் வைப்பு தொகை ரூ.10 லட்சம்.
*20 X10 அளவில் 2 கடைகள். ஒவ்வொரு கடைக்கும் முன் வைப்பு தொகை ரூ.20 லட்சம்
*கேண்டீன் 30X29 அளவில் 1 எண்ணம். முன் வைப்பு தொகை ரூ.30 லட்சம்.
*மார்க்கெட் கட்டண கழிப்பிடம் 1 எண்ணம். முன் வைப்பு தொகை ரூ.6 லட்சம்.
மேற்கண்டவாறு தீர்மானம் கொண்டு வரப்பட்டது,
மேலும் அலுவலக குறிப்பில் கூறப்பட்டிருந்த அம்சங்கள் வருமாறு:-
*குத்தகை ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோர மன்றம் அனுமதிக்கலாம்.
*பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் பழைய கடை உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர் பாக்கி மற்றும் கடை வாடகை பாக்கி நிலுவயில் உள்ளவர்கள் ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி யில் கலந்து கொள்ள அனுமதி வழங்க இயலாது.
*நகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளியில் கலந்து கொள்ள அனுமதி வழங்க இயலாது என மன்றத்தின் பார்வைக்கும் அனுமதிக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது,
