கோவில்பட்டி அரசு கலைகல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்களாக சேர்ப்பு

கோவில்பட்டி அரசு கலை கல்லூரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம், அரசு கலை கல்லூhயில் பயிலும் மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்க்க சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. தலைமையில் இன்று நடைபெற்றது.
முகாமில் வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிருஸ்டி பாய், வட்டாட்சியர் லெனின், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நிர்மலா, மாணவ மற்றும் மாணவிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத மாணவர் மாணவிகள் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர்.
இது போல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
