• June 7, 2025

சிறுவர், சிறுமியர்களின் ஓவியம், புகைப்பட கண்காட்சி

 சிறுவர், சிறுமியர்களின் ஓவியம், புகைப்பட கண்காட்சி

கோவில்பட்டி சிடார் பேப்பர் போட் நிறுவனம் சார்பில் தாமஸ் நகர் சமுதாயகூடத்தில் சிறுவர், சிறுமியர்களின் ஓவியம் மற்றும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் சிறுவர், சிறுமியர்களின் படைப்புகள் இடம் பெற்று இருந்தன.

கண்காட்சி தொடக்க விழாவுக்கு தமிழ் பாப்திஸ்து பள்ளி தாளாளர்  லால்பகதூர் கென்னடி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜெயந்தி, கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.

தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரன், 7-வது வார்டு கவுன்சிலர் அற்புதமணி பிரபாகரன், பி.எஸ்.பால்ராஜ் பொதுநலசேவை அறக்கட்டளை அம்பேத்கர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் மற்றும் மாரிக்கண்ணன், ஆசிரியர்கள் பொன்குன்றம், சித்ரா, உமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *