• June 7, 2025

Month: October 2023

ஆன்மிகம்

திருவாசகம்-திருப்பாடல்கள்

திருவாசகம் திருச்சதகம் ஆனந்தாதீதம் வித்தின்றி விளையச்செய்வாய்  இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள்? என்று பல கேள்விகள் இருக்கின்றன.  ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான் என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா? அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும்.  எது ஒன்று தோன்றுவதற்கும், அதை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவபிரிவு பொன்விழா: கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுபோட்டி

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கி 50ம் ஆண்டு நிறைவையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, ஓவிய போட்டிகளும்,அங்கன்வாடி பணியாளர்களுக்கு சமையல் போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ், மூலிகை செடிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்..உறைவிட மருத்துவர் சுதா முன்னிலை வகித்தார்.சித்த மருத்துவ பிரிவு டாக்டர் அபிநயா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட சித்த மருத்துவ […]

கோவில்பட்டி

பள்ளிக்கூட வேன் உரசியதில் டிராக்டர் உருண்டது; பெண் உள்பட 2 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் அருகே உள்ள ஏ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சார்ந்த முத்துச்சாமி மகன் சந்தனமாடசாமி(வயது 32) சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். தனது டிராக்டரில்  தனது தாய் ராஜேஸ்வரி(60), அதே ஊரை சேர்ந்த மாடசாமி மனைவி கோமதி(50), செல்வபாண்டி மனைவி சரஸ்வதி(60) ஆகியோருடன் மஞ்சநாயக்கன்பட்டி ஏ.வேலாயுதபுரம் விலக்கு அருகில் விவசாய பணி செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த எட்டயாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் முந்தி செல்ல முயன்றது. இதில் டிராக்டரின் பக்கவாட்டில் பள்ளி வேன் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பணி, நிறைய அனுபவங்களை கற்றுத்தந்தது; கோவில்பட்டி கூட்டத்தில் செந்தில்ராஜ்

கோவில்பட்டியில் உள்ள எழுத்தாளர்  கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் இலக்கியம், கலை மற்றும் இசை சங்க கூட்டம் நடைபெற்றது. இடமாறுதல் ஆகி செல்லும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமை தாங்கி  பேசியதாவது:- இடமாறுதல் என்பது அரசு பணியில் இயல்பாக நடக்கக்கூடியதுதான். நான் எங்கு இடமாறுதல் பெற்று சென்றாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்காகத்தான் ஒரு குழுவாக வேலை செய்ய போகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த 3 ஆண்டுகள் எனக்கு நிறைய அனுபவங்களை கற்றுத்தந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் , […]

கோவில்பட்டி

தி.மு.க.ஆட்சியில் திரைத்துறை முடக்கம்; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி  அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டி ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம்- மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி  அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ. பங்கேற்று, அப்துல் கலாம் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ரத்த தான முகாமை தொடக்கிவைத்தாா். டாக்டர்  வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ரத்த தானம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை; அரசுக்கு வேண்டுகோள்

கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி பகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். நகர தலைவர் மாடசாமி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை அமைக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். நலிவடைந்த முடி திருத்தும் தொழிலாளர்ளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும். மருத்துவ தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 158வது கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகத்தின் செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். முனைவர்.ஆ.சம்பத்குமார் முன்னிலை வகித்தார், முகாமை கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி சுபேதார்.கருப்பசாமி தொடங்கி வைத்தார். கண் விழிப்பரிசோதகர் ஜோதிலட்சுமி முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கண் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில்  அமாவாசை சிறப்பு பூஜை 

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது . இதனையொட்டி சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.  பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி சுபா நகர் நரசிங்க பெருமாள் கோவில் நவராத்திரி மகோத்சவம்; நாளை தொடங்குகிறது

கோவில்பட்டி சுபாநகர் திருமால் நகரில் ஸ்ரீ ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத சனி வார பெருவிழா நடைபெற்று வருகிறது. இன்று 4-ம் சனிக்கிழமை காலை கோ பூஜை, விஸ்வரூப சேவை, திருப்பாவை சேவை, தீபாராதனை, சாற்று மறை கோஷ்டி நடைபெற்றது. பழ அலங்கார திவ்ய மண்டபத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண அலங்காரம் நடந்தது. மாலை 6 ,மணிக்கு சிறப்பு பஜனை, நாம சங்கீர்த்தனம் நடைபெறும். நாளை 15-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை […]

தூத்துக்குடி

குறுக்குசாலையில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ; அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு

 தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக சார்பு அணிகளின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் வருகிற 16ம் தேதி காலை 10 மணி அளவில் குறுக்குச் சாலையில் உள்ள கீதாஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற […]