கோவில்பட்டி சுபா நகர் நரசிங்க பெருமாள் கோவில் நவராத்திரி மகோத்சவம்; நாளை தொடங்குகிறது

கோவில்பட்டி சுபாநகர் திருமால் நகரில் ஸ்ரீ ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத சனி வார பெருவிழா நடைபெற்று வருகிறது.
இன்று 4-ம் சனிக்கிழமை காலை கோ பூஜை, விஸ்வரூப சேவை, திருப்பாவை சேவை, தீபாராதனை, சாற்று மறை கோஷ்டி நடைபெற்றது. பழ அலங்கார திவ்ய மண்டபத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண அலங்காரம் நடந்தது. மாலை 6 ,மணிக்கு சிறப்பு பஜனை, நாம சங்கீர்த்தனம் நடைபெறும்.
நாளை 15-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி மகோத்சவம் நடைபெற இருக்கிறது, காலை 6 முதல் 8 மணி வரை நித்ய ஆராதனம், காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ சவுபாக்ய மகாலட்சுமி மகா யாகம் பூர்ணாஹுதி , மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொலுபூஜை, தீபாராதனை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காசி அளிப்பார். 15ந்தேதி லட்சுமி நாராயணன் , 16ந்தேதி மச்ச அவதாரம், 17ந்தேதி கூர்ம அவதாரம், 18ந்தேதி யோக நரசிம்ம அவதாரம், 19ந்தேதிவாமன அவதாரம், 20ந்தேதி (உலகளந்த பெருமாள்)திரிவிக்கிரம அவதாரம், 21ந்தேதி பலராம அவதாரம், 22ந்தேதிகிருஷ்ண அவதாரம், 23ந்தேதி மோகினி அவதாரம்(சரஸ்வதி) .
24-ந்தேதி விஜயதசமி மாலை 6 மணிக்கு ஸ்ரீ பெருமாள் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பரி வேட்டை அம்பு போடும் வைபவம் வையாளி சேவை நாமங்கீர்த்தனம் நடைபெறும்,
