• June 8, 2025

கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை; அரசுக்கு வேண்டுகோள்

 கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை; அரசுக்கு வேண்டுகோள்

கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி பகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். நகர தலைவர் மாடசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை அமைக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். நலிவடைந்த முடி திருத்தும் தொழிலாளர்ளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும். மருத்துவ தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகர மகளிர் அணி தலைவி பரமேஸ்வரி, மாவட்ட ஆலோசகர் மகேந்திரன், நகர பொருளாளர் மணி, நகர துணை செயலாளர் கருத்தபாண்டி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஒன்றிய துணை செயலாளர்  முத்துக்குமார், இளைஞர்அணி தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *