உரிமம் இல்லாமல் பட்டாசு கடை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை; விழிப்புணர்வு கூட்டத்தில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், இருப்பு வைத்து இருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், பேசியதாவது:- நமது மாவட்டத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு 9 நபர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குழுவின் வாயிலாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பட்டாசுத் […]