• June 7, 2025

Month: October 2023

தூத்துக்குடி

உரிமம் இல்லாமல் பட்டாசு கடை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை; விழிப்புணர்வு கூட்டத்தில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், இருப்பு வைத்து இருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று  தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,   பேசியதாவது:- நமது மாவட்டத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புக் குழு 9 நபர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குழுவின் வாயிலாக மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பட்டாசுத் […]

கோவில்பட்டி

பெண் குழந்தைகள் தினம்: கோவில்பட்டி பள்ளியில்  மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிப்பு

நாடு முழுவதும் அக்டோபர்  11ம் தேதி (இன்று) பெண் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திடவும், பெண் குழந்தைகளை வரவேற்று, பாதுகாத்து, போற்றிடவும்  உலக பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினவிழா நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிக்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் நாராயணசாமி, […]

கோவில்பட்டி

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்

ஓட்டபிடாரம் வட்டம் வேடநத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகம் இன்று காலை நடைபெற்றது. ஓட்டபிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜென் கிறிஸ்டி பாய், ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காசி விஸ்வநாதன், வேட நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகவள்ளி, வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா பழைய பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது

.தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.58.67 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி அண்ணா பழைய பஸ் நிலையம் நவீன வசதியுடன் கட்டப்படுள்ளது.’ பஸ்  நிலையம் திறப்பு விழா 8 -ந் தேதி நடந்தது. விழாவில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இன்று புதன்கிழமை ,முதல் இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. பயன்பாட்டுக்கு வந்த புதிய  பஸ் நிலையத்தில் குடிநீர், விளம்பரப் பலகைகள் பஸ் நிறுத்தங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் தொடர்பான  குறைபாடுகள் […]

கோவில்பட்டி

இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி கல்லூரி மாணவர் இடம் பிடித்தார்

 மலேசியாவில் வருகிற  27 -ந் தேதி முதல் நவம்பர் 4 வரை சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஆக்கி 11வது சீசன் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டியில் பங்கேற்கும்  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் பயிற்சி பெற்று வரும் சதீஷ் இடம் பெற்றுள்ளார். இவர் கோவில்பட்டி எஸ்.எஸ்‌.டி.எம். கல்லூரியில் 3-ம்ஆண்டு […]

கோவில்பட்டி

தேசிய அளவிலான கடல் சார் விளையாட்டு போட்டி: லாயல் மில் பெண் தொழிலாளர்கள்

கோவில்பட்டியை சேர்ந்த முத்துகுட்டி, அயன்விருசம்பட்டியை சேர்ந்த முத்துமாரியம்மாள், சிதம்பரபுரத்தை  சேர்ந்த ராமலெட்சுமி. ஆகியோர் தங்கள்  பள்ளி படிப்பினை முடித்த பின்னர் குடும்பத்தின் வறுமையின் காரணமாக மேற்படிப்பினை தொடர முடியமால் வேலை பார்க்க தொடங்கினார்கள்.  கோவில்பட்டி ரெயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் லாயஸ் மில் டெக்ஸ்டைல் பிரிவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக டெய்லராக பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் அந்த பெண் தொழிலாளர்களின் கல்வி ஆர்வத்தை அறிந்து கொண்ட மில் நிர்வாகம்,  3 பெரும்  உயர்கல்வி படிக்கவும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நிற்குமா? ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை

திருநெல்வேலி -சென்னை இடையே இயக்கப்படும் வந்தேபாரத் விரைவு ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வந்தபடி உள்ளது. முன்னாள்  அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான  கடம்பூா் செ. ராஜு, தெற்கு ரெயில்வே பொது மேலாளா் ஆா். என் .சிங்கிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா். இந்த மனுவுக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளா், அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறியுள்ளதாவது:- வந்தே பாரத் ரெயில்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரங்கள், கூடுதலாகரெ […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மீண்டும் ஆட்டுச்சந்தை; முதல்-அமைச்சருக்கு கோரிக்கை கடிதம்

கோவில்பட்டி  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில்  செயல்பட்டு வந்த ஆட்டுச்சந்தையை  மீண்டும் செயல்படுத்த வேண்டும்.  நேதாஜி திருவுருவ சிலையை  கோவில்பட்டியில் நிறுவ வேண்டும் என்பன போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக முதல்வருக்கு  கடிதம் அனுப்பப்பட்டது. உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில்  127 கடிதங்கள் அனுப்பப்பட்டது. நற்பணி […]

செய்திகள்

மதுரை ரெயில்வே கோட்ட புதிய  மேலாளராக சரத் ஸ்ரீவத்சவா பதவியேற்பு

மதுரை ரெயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக சரத் ஸ்ரீவஸ்தவா இன்று திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பதவி ஆணைக்காக காத்திருக்கும் தற்போதைய ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாதன் அனந்த், சரத்   ஸ்ரீவத்சவாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்த சரத் ஸ்ரீ வத்சவா அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டக்கல்வி பயின்றவர்‌. இவர் இந்திய ரெயில்வே போக்குவரத்து பணி 1996 ஆண்டு பிரிவை சேர்ந்தவர்.  இவர் மதுரைக்கு வருவதற்கு முன்பாக டெல்லி ரெயில்வே வாரியத்தில் […]

கோவில்பட்டி

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு போனஸ், தீபாவளிக்கு பிறகு கூலி உயர்வு ; உற்பத்தியாளர்கள் சங்க

கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க பொது மகா சபைக் கூட்டம்  நடந்தது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க சாத்துார் கிளை தலைவர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் வரவேற்றார்.  ஆலோசனை கூட்டத்துக்குப்பின் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம் செய்தியாளர்களிடம் […]