தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா பழைய பஸ் நிலையம் செயல்பட தொடங்கியது

.தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.58.67 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி அண்ணா பழைய பஸ் நிலையம் நவீன வசதியுடன் கட்டப்படுள்ளது.’
பஸ் நிலையம் திறப்பு விழா 8 -ந் தேதி நடந்தது. விழாவில் 3 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இன்று புதன்கிழமை ,முதல் இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.
பயன்பாட்டுக்கு வந்த புதிய பஸ் நிலையத்தில் குடிநீர், விளம்பரப் பலகைகள் பஸ் நிறுத்தங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் தொடர்பான குறைபாடுகள் இருப்பதாகவும் அவற்றை அதனை சரி செய்யும்படியும் மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வக்கீல் மாடசாமி கூறியதாவது:-
ரூ.57 கோடி செலவில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் 29 பஸ்கள் நிறுத்துவதற்கு மட்டுமே கவுண்ட்டர்கள் அமைக்கபட்டு உள்ளன. மினி பஸ்கள் உள்ளே இயக்க அனுமதிக்கவில்லை. மேலும் மினி பஸ்களுக்கு ஒரு நிறுத்தம் கூட கிடையாது என்பது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
பஸ் நிலையத்தில் மேல் மாடி மற்றும் மேல் தளங்கள் எதற்காக கட்டப்பட்டது என்று தெரியவில்லை. இதற்கான ஷைன் போர்டு எனப்படும் விளம்பர பலகைகள் இதுவரை வைக்கப்படவில்லை.

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் இயந்திரத்தில் ஒரு தம்ளர் கூட வைக்கப்படவில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகள் முறையாக திறந்து வைக்கப்பபடவில்லை.
இதை எல்லாம் முறைப்படுத்தியும், மினி பஸ்களை இயக்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும், மேலே உள்ள கட்டிடங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவும் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்லக்கூடிய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அவசியம் அமைக்க வேண்டும். திருநெல்வேலி, நாகர்கோவில் மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இங்கிருந்து செல்கின்றன. மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்களும் இங்கிருந்து புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் பஸ்களின் நேர அட்டவணை வைக்க வேண்டும் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வக்கீல் மாடசாமி கூறினார்.

