மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்

ஓட்டபிடாரம் வட்டம் வேடநத்தம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகம் இன்று காலை நடைபெற்றது. ஓட்டபிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜென் கிறிஸ்டி பாய், ஓட்டபிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காசி விஸ்வநாதன், வேட நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகவள்ளி, வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்,.
மக்கள் தொடர்பு முகாமின்போது பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார். முன்ன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்க கண்காட்சி அரங்குகளை ஆட்சியர் பார்வையிட்டார்.
