இந்திய ஜூனியர் ஆக்கி அணியில் கோவில்பட்டி கல்லூரி மாணவர் இடம் பிடித்தார்

மலேசியாவில் வருகிற 27 -ந் தேதி முதல் நவம்பர் 4 வரை சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஆக்கி 11வது சீசன் நடைபெறுகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் பயிற்சி பெற்று வரும் சதீஷ் இடம் பெற்றுள்ளார். இவர் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் 3-ம்ஆண்டு படித்து வருகிறார். தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மாணவர் சதீஸ், இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் ,செயலாளர் முனைவர் குருசித்திர சண்முக பாரதி, முதுநிலை துணைத்தலைவர் நாகமுத்து, சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் சிவக்குமார், பயிற்சியாளர் முத்துகுமார் , ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, துணைச் செயலாளர் முருகன். மாரியப்பன். சந்தானம். மணிமாறன். செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜ் ,ஜார்ஜ் ஈஸ்டர், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பெரியதுரை, ஹெலன் மேரி, மேரி வினோ லோபோ மற்றும் மூத்த வீரர்கள் பாராட்டினர்
