• June 7, 2025

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நிற்குமா? ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை

 கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நிற்குமா? ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை

திருநெல்வேலி -சென்னை இடையே இயக்கப்படும் வந்தேபாரத் விரைவு ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வந்தபடி உள்ளது. முன்னாள்  அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான  கடம்பூா் செ. ராஜு, தெற்கு ரெயில்வே பொது மேலாளா் ஆா். என் .சிங்கிடம் கோரிக்கை மனு அளித்திருந்தாா்.

இந்த மனுவுக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளா், அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

வந்தே பாரத் ரெயில்களை அறிமுகப்படுத்துவதற்கான அதிகாரங்கள், கூடுதலாகரெ நிலையங்களில் நிறுத்துவதற்கான அதிகாரங்கள் ரெயில்வே வாரியத்திடம் தான் உள்ளது. கோவில்பட்டி ரெயில் நிலையத்தின் வணிக தரவுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ரெயில்வே வாரியத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

 இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *