கோவில்பட்டியில் மீண்டும் ஆட்டுச்சந்தை; முதல்-அமைச்சருக்கு கோரிக்கை கடிதம்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பாக கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்த ஆட்டுச்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நேதாஜி திருவுருவ சிலையை கோவில்பட்டியில் நிறுவ வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 127 கடிதங்கள் அனுப்பப்பட்டது.
நற்பணி இயக்கத் தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். கண்ணன், கணேசமூர்த்தி, மதிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் நற்பணி இயக்கத்தை சேர்ந்த ரத்தினவேல், அயன் சேகர், பரமசிவம், முத்துப்பாண்டி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
