• June 4, 2025

Month: September 2023

தூத்துக்குடி

50 கிராம குளங்கள் பயன்பெறும் திட்டப்பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மலைப்பட்டி- ஒட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் மலர்க்குளம், பெரியகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் சுற்றியுள்ள 50 கிராம குளங்கள் பயன்பெறும் வகையில் வரத்து கால்வாய் நீரோடையில் 6 பாலங்கள் அமைத்தல்,15 கிலோமீட்டர் தூரம்வரை தூர்வாரும் பணி மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வலியுறுத்தி இருந்தார். இதை ஏற்று […]

கோவில்பட்டி

கடைக்குள் புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

கோவில்பட்டியை அடுத்த பாண்டவர் மங்கலம் சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த செந்தில்ராஜ் மனைவி சண்முகத்தாய் (வயது 56). இவர் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பகலில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் பிஸ்கட் கேட்டார். அப்போது கடையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டை சண்முகத்தாய் எடுத்து கொண்டிருந்த போது, திடீரென்று கடைக்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ […]

தூத்துக்குடி

அமைச்சர் மா.சுப்பிரமணியன், 29ம் தேதி தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை மறுநாள்  29ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அன்றைய தினம் காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் முன்பிருந்து எஸ்.இ.பி.சி. நிறுவனம் வரை ‘நடப்போம் நலம்பெறுவோம்” என்னும் நோக்கில் 8 கி.மீ தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை ஆய்வு செய்து […]

கோவில்பட்டி

அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றம்

அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றப்படுகிறது. சென்னை, சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது. இதேபோல, இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி யூனியனில் ரூ2.12 கோடி வளர்ச்சிப் பணிகள்

கோவில்பட்டி. யூனியன் சிறப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிச்சாமி, யூனியன் ஆணையர் ராஜேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், யூனியனுக்கு உட்பட்ட 19 வார்டுகளிலும் யூனியன் பொது நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது என்று முடிவு செய்யபப்ட்டது. யூனியனிலுள்ள தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை […]

செய்திகள்

பா.ஜனதா குறித்து கருத்து தெரிவிக்க அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தடை

பா.ஜனதா உடனான கூட்டணியை அ.தி.மு.க. நேற்று முன்தினம் முறித்துக்கொண்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திலேயே கட்சி நிர்வாகிகளுக்கு சில வாய்மொழி உத்தரவும் போடப்பட்டுள்ளது. அதாவது, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள், ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறுயாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டோ அல்லது பொது வெளியிலோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா உடனான மோதல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பூவணநாத சுவாமி கோவிலில் தங்க கொடிமரங்கள் ; அறங்காவலர் குழு கூட்டத்தில்

கோவில்பட்டி பூவணநாதசுவாமி கோவிலில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டு பதவி ஏற்ற அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு தலைமையில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அறங்காவலர்கள்  சுபாஷ், கை.சண்முகராஜ், பூ.சு.திருப்பதிராஜன், செ.ரவீந்திரன், தி. நிருத்தியலட்சுமி  மற்றும் கோவில் செயல் அலுவலர் கி.வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவிலின் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள்  நிறைவடைய உள்ள நிலையில் தொல்லியல் துறையின் கருத்துரு பெற்று திருப்பணிகள் செய்யவும், அம்பாள் மற்றும் சுவாமி சன்னதி கொடிமரங்களை தங்க கொடிமரங்களாக மாற்றும் செய்து 2024 […]

தூத்துக்குடி

திருக்குறள்  ஒப்பித்தல் போட்டி; மாணவர்கள் அக்டோபர் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-  தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்போா், திறனறிக் குழு உறுப்பினா்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவா். மாணவா்கள் 1330 குறள்களையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவா்களாக இருப்பதோடு, குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக […]

செய்திகள்

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறிவு பற்றி அமைச்சர் துரைமுருகன் கருத்து

சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும். தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும். காவிரி […]

தூத்துக்குடி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய  SSC CGL Tier-1 தேர்வுக்கான   முடிவுகள் 19.9.23 அன்று வெளியாகி உள்ளது. மேலும் SSC MTS Havildhar  தேர்வுக்கான முடிவுகளும் 2.9.23 அன்று வெளியாகி உள்ளது. மேற்படி தேர்வுகளில் தூத்துக்குடி            மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.&