கோவில்பட்டி பூவணநாத சுவாமி கோவிலில் தங்க கொடிமரங்கள் ; அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

கோவில்பட்டி பூவணநாதசுவாமி கோவிலில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டு பதவி ஏற்ற அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு தலைமையில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அறங்காவலர்கள் சுபாஷ், கை.சண்முகராஜ், பூ.சு.திருப்பதிராஜன், செ.ரவீந்திரன், தி. நிருத்தியலட்சுமி மற்றும் கோவில் செயல் அலுவலர் கி.வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவிலின் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தொல்லியல் துறையின் கருத்துரு பெற்று திருப்பணிகள் செய்யவும், அம்பாள் மற்றும் சுவாமி சன்னதி கொடிமரங்களை தங்க கொடிமரங்களாக மாற்றும் செய்து 2024 ம் ஆண்டு குடமுழுக்கு நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டும் பணியை துரிதப்படுத்துத்தல், கோவிலுக்கு சொந்தமான இடங்களை நிள அளவையர் மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருப்பின் இந்த சமய அறநிலைய துறை சட்ட விதிகளின் படி அகற்றுதல் சமபந்தமாக முடிவு செய்யப்பட்டது.
இது தவிர ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை சிறப்பாக நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
