அமைச்சர் மா.சுப்பிரமணியன், 29ம் தேதி தூத்துக்குடி வருகை
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை மறுநாள் 29ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அன்றைய தினம் காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் முன்பிருந்து எஸ்.இ.பி.சி. நிறுவனம் வரை ‘நடப்போம் நலம்பெறுவோம்” என்னும் நோக்கில் 8 கி.மீ தூரம் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடத்தை ஆய்வு செய்து நடைபயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
காலை 11 மணி அளவில் தூத்துக்குடி சங்கர் காலனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.136.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடப் பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.4.06 கோடி மதிப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.