மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய அப்டேட்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய SSC CGL Tier-1 தேர்வுக்கான முடிவுகள் 19.9.23 அன்று வெளியாகி உள்ளது. மேலும் SSC MTS Havildhar தேர்வுக்கான முடிவுகளும் 2.9.23 அன்று வெளியாகி உள்ளது.
மேற்படி தேர்வுகளில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது பெயர் ,பதிவெண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களை 9942503151 என்ற whatsapp எண்ணில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் கீழ்க்கண்ட கூகுள் படிவத்தினை ஓபன் செய்து உடனடியாக பூர்த்தி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://forms.gle/6cRKc4jb8PykNudn8
மேற்கண்டவாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
