50 கிராம குளங்கள் பயன்பெறும் திட்டப்பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மலைப்பட்டி- ஒட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் மலர்க்குளம், பெரியகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் சுற்றியுள்ள 50 கிராம குளங்கள் பயன்பெறும் வகையில் வரத்து கால்வாய் நீரோடையில் 6 பாலங்கள் அமைத்தல்,15 கிலோமீட்டர் தூரம்வரை தூர்வாரும் பணி மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் போன்ற கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வலியுறுத்தி இருந்தார். இதை ஏற்று முதல் அமைச்சர் மு க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித்துறை மூலம் 13.83 கோடி மதிப்பீட்டில் 6 பாலங்கள் அமைத்தல்,15 கிலோமீட்டர் தூரம்வரை தூர்வாரும் பணி, மேலும் புதிதாக 2.67 கிலோமீட்டர் தூரம் புதிய வழித்தட கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை தெற்கு ஆரைக்குளம் கிராமத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா., யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்