தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைப்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழா காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு, 3345 பேருக்கு ரூ.342 கோடி மதிப்பிலான தொழிற் கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினர். விழாவில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சார் ஆட்சியர் கவுரவ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு வாரத்திற்கு 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு வந்தது. குளிர்சாதன வசதி கொண்ட பி.5 பெட்டியில் ஏ.சி. இயங்கவில்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். அந்த பெட்டியில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் ஏ.சி. இயங்காதது குறித்து ரெயில்வே நிா்வாகத்திற்கு ஆன்லைனில் புகார் தெரிவித்தனர். ஆனால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. […]
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா; பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 25-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதில் காளி வேடம் அணியும் பக்தர்கள் […]
கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது தகுதிசான்று, காப்பு சான்று இல்லாமல், அனுமதிக்க பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்களை அவர் பறிமுதல் செய்தார். இந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு தலா ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல தண்ணீர் டேங்கருடன் கூடிய லாரி ஒன்று தகுதி சான்று, காப்புச் சான்று இல்லாமல் இயக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வாகனமும் பறிமுதல் […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரடரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.’ அப்போது லாரியின் மேற்பகுதியில் ஒரு ரகசிய அறை இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த அறையை திறந்து சோதனையிட்ட போது 2 கிலோ வீதம் 300 பேக்குகளில் […]
அ.தி.மு.க. மாநாட்டுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை; டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்று எழுச்சி மாநாட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்த பின்னும் காவல்துறை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு அளிக்காதது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.). சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். அப்போது அ.தி.மு.க .வக்கீல் அணியினர் […]
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மதுரையில் செப்டம்பர் 15ந்தேதி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர ம.தி.மு.க சார்பில் ஆட்டோ பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டோவிலும் மாநாடு தொடர்பான போஸ்டர்கள் ஓட்டும் மற்றும் பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. மாநாட்டு போஸ்டர்கள் ஒட்டிய ஆட்டோ பிரச்சாரத்தை ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது :- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5.1.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியிலின் படி 71,8724 ஆண்கள், 75,2023 பெண்கள் 215 திருநங்கைகள் […]
ஒவ்வொரு மனிதன் உடம்பிலும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள்,சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும்.சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது.வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்கு அளிக்கிறது.இவ்விரண்டு அணுக்களும் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதது.இதை குறிக்க தான் வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் கோவில்களில் சுவர்களில் பூசப்பட்டிருகின்றது.மனித உடலில் உயிர் உண்டாவதை போல இறைவனின் ஆன்மா மூல ஸ்தானத்தில் இருக்கும்.அதனால் தான் அதை கருவறை என்று கூறுகிறார்கள்.சுவர்களில் உள்ள வர்ணங்கள் இவைகளை […]
கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே […]