• June 7, 2025

தகுதி சான்று பெறாத 2 ஆட்டோ, லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்

 தகுதி சான்று பெறாத 2 ஆட்டோ, லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் நேற்று  வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது தகுதிசான்று, காப்பு சான்று இல்லாமல், அனுமதிக்க பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற 2 ஆட்டோக்களை அவர் பறிமுதல் செய்தார். இந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு தலா ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போல தண்ணீர் டேங்கருடன் கூடிய லாரி ஒன்று தகுதி சான்று, காப்புச் சான்று இல்லாமல் இயக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளருக்கு ரூ,7 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப் பட்டது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *